மாவட்டம் முழுவதும் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Update: 2022-09-11 18:48 GMT



தமிழகம் முழுவதும் நேற்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 755 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த முகாம்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் ஆர்வமாக வந்து‌ கொரோனா‌ தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதில் 641 பேருக்கு முதல் தவணையும், 8 ஆயிரத்து 107 பேருக்கு 2-ம் தவணையும், 31 ஆயிரத்து 746 பேருக்கு 3-ம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் மூலம் நேற்று ஒரேநாளில் 40 ஆயிரத்து 494 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்