வாலிபர் மாயம்

வாலிபர் மாயம் ஆனார்.

Update: 2022-07-17 18:28 GMT

தோகைமலை ஊராட்சி வெள்ளப்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 29). மெக்கானிக். இவர் கடந்த 14-ந்தேதி வேலைக்கு சென்று வருவதாக கூறி விட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். இரவு வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து கந்தசாமியின் மனைவி லெட்சுமி தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான கந்தசாமியை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்