மானாமதுரை,
மானாமதுரை வேளாண் விரிவாக்க மையத்தில் பாரம்பரிய நஞ்சில்லா இயற்கை விவசாயம் மற்றும் அங்கக சான்று பெறுவது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு வேளாண்மை உதவி இயக்குனர் ரவிசங்கர் தலைமை தாங்கினார். மேலும், வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதல் திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார். சிவகங்கை விதைசான்று உதவி இயக்குனர், பாரம்பரிய நஞ்சில்லா இயற்கை விவசாய முறைகள் குறித்தும், வேளாண்மையின் சிறப்புகள் குறித்தும் மத்திய அரசின் பி.ஜி.எஸ். இணைய தளத்தில் எவ்வாறு பதிவு செய்வது? என்பது குறித்தும் பேசினார்.
வேளாண் அலுவலர் கிருத்திகா, துணை வேளாண் அலுவலர் சப்பாணிமுத்து ஆகியோர் திட்ட பயன்பாடுகள் குறித்து விளக்கி பேசினர். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் பாண்டியம்மாள், தினஷே் ஆகியோர் செய்திருந்தனர்.