கிணற்றில் விழுந்து மூதாட்டி பலி

நிலக்கோட்டை அருகே கிணற்றில் விழுந்து மூதாட்டி பலியானார்.

Update: 2023-08-17 23:30 GMT

நிலக்கோட்டை அருகே உள்ள பெருமாள்கோவில்பட்டியை சேர்ந்தவர் முத்தன். இவரது மனைவி முத்தம்மாள் (வயது 85). இந்நிலையில் நேற்று தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த தனது மருமகளை பார்ப்பதற்கு முத்தம்மாள் சென்றார். அப்போது அந்த பகுதியில் உள்ள தோட்ட கிணற்றுக்குள் அவர் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். அதில் நீரில் மூழ்கி அவர் பலியானார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் விளாம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

மேலும் செய்திகள்