ஆதித்தனார் கல்லூரியில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.;
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கி உறுதி மொழியை படித்தார். கல்லூரி அலுவலக கண்காணிப்பாளர் பொன்துரை, உதவியாளர் சிலுவை ரோஸ்மேரி மற்றும் கல்லூரி அலுவலர்கள் அனைவரும் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.