வாலிபருக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது

வாலிபருக்கு கத்திக்குத்து தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-25 19:02 GMT


மதுரை அண்ணாநகர், எஸ்.எம்.பி.காலனியை சேர்ந்தவர் முத்துகருப்பசாமி (வயது 38). இவருக்கும் அவரது பக்கத்து வீடுகளில் வசித்து வருபவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று முத்துகருப்பசாமி அண்ணா நகர் பகுதியில் நடந்து வந்தபோது அவரை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. அந்த கும்பல் அவரிடம் தகராறு செய்து கத்தியால் குத்தி விட்டு தப்பியது. அதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் எஸ்.எம்.பி.காலனியை சேர்ந்த ஜோதிகுமார் (22), ராமர் (19) உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்