மளிகை கடைக்காரர் வீட்டில் நகை திருடிய 2 பேர் கைது

அரூர் அருகே மளிகை கடைக்காரர் வீட்டில் நகை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-07-27 16:56 GMT

அரூர்:

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள ராயப்பன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மனைவி சுந்தராம்பாள். இவர்கள் மளிகை கடை நடத்தி வருகின்றனர். கடந்த 16-ந்தேதி மர்ம நபர்கள், இவர்களின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 4 பவுன் நகையை திருடி சென்றனர். இதுகுறித்து சுந்தராம்பாள் அரூர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த திருட்டில் சேலத்தை சேர்ந்த எரி அலாசின் (வயது27), சதீஷ்குமார் (24) ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்