பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை

பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-09-28 18:45 GMT

விழுப்புரம் பாப்பான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஷகிலா (வயது 27). இவருக்கும் விழுப்புரம் ஊழியர் நகரை சேர்ந்த அகமத்பாஷா (35) என்பவருக்கும் கடந்த 25.10.2021 அன்று திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தின்போது ஷகிலாவின் பெற்றோர், 15 பவுன் நகை போடுகிறோம் என்று கூறி 11 பவுன் நகை மட்டும் போட்டுள்ளனர். இதனால் திருமணம் முடிந்து சில நாட்களில் இருந்தே ஷகிலாவிடம் மேலும் 4 பவுன் நகையை கேட்டு அவரது கணவர் குடும்பத்தினர் பிரச்சினை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் அகமத்பாஷா, அவரது தந்தை மகபூப் பெய்க், தாய் சிராஜ், சகோதரி முஜிபா ஆகிய 4 பேரும் சேர்ந்து ஷகிலாவிடம், பெற்றோர் வீட்டில் இருந்து 4 பவுன் நகையை வாங்கி வரும்படி கேட்டு அவரை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து ஷகிலா, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அகமத்பாஷா உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்