கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

திண்டிவனம் அருகே கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

Update: 2022-06-28 17:25 GMT

திண்டிவனம்

திண்டிவனம் அருகே உள்ள பட்டணம் காலனி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் நாகப்பன்(வயது 37). சொந்தமாக கார் வைத்து தொழில் செய்து வந்த இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் காரை விற்று விட்டு தற்காலிக டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

ஆனால் வேலை சரியாக கிடைக்காததால் விரக்தியில் இருந்த நாகப்பன் திண்டிவனம்-செஞ்சி பஸ் நிறுத்தத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே நாகப்பன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்