சென்னை: தனியார் நிறுவனத்தின் ஊழியர் பஸ் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

சென்னையில் தனியார் நிறுவனத்தின் ஊழியர் பஸ் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-07-15 10:03 GMT

சென்னை,

சென்னை செனாய் நகரில் தனியார் நிறுவனத்தின் ஊழியர் பஸ் பழுது பார்க்கும் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த பஸ் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் மளமளவெ தீ பரவியதால் பஸ் முழுவதும் தீப்பற்றி எரிந்த கரும்புகை வெளியானது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பஸ்சில் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். இதனால் அந்த பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்