புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-01-25 18:45 GMT

மாணவர்கள் சிரமம்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை 26-வது வார்டு தாளாளம்பாள் பள்ளி செல்லும் சாலை படுமோசமாக குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியே பள்ளி செல்லும் மாணவர்களும், அழைத்துச் செல்லும் பெற்றோர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர் எனவே மாணவர்களின் கருதி சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஜீஸ் கான், தேவகோட்டை.

போக்குவரத்து நெரிசல்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் பகுதியில் சிலர் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

வெற்றி, காரைக்குடி.

பொதுமக்கள் அவதி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் பகுதி மற்றும் பஸ்நிலையப்பகுதிகளில் நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்களும் பஸ்நிலையத்திற்கு வரும் பயணிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்பு, தேவகோட்டை,

நடவடிக்கை தேவை

சிவகங்கை மாவட்டம் கரிசல்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் அதிகம் நுழைகின்றன. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படும் சூழல் உள்ளது எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரவி, கரிசல்பெட்டி,

குரங்குகள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குரங்குகள் அதிகம் சுற்றித்திரிகின்றன. இந்த குரங்குகள் வீட்டில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்துகின்றன. எனவே இந்த குரங்குகளின் அட்டகாசத்தை தடுக்க வனத்துறையினர் கூண்டு வைத்து அதை பிடிக்க வேண்டும்.

கார்த்திக், எஸ்.புதூர்.

Tags:    

மேலும் செய்திகள்