செல்போனுக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி கட்டிடதொழிலாளி பலி

பல்லாவரம் அருகே செல்போனுக்கு சார்ஜ் போடும் போது மின்சாரம் தாக்கி கட்டிடதொழிலாளி பலியானார்.

Update: 2022-09-20 08:36 GMT

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம் துலுக்கானத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது 36). இவருக்கு திருமணம் ஆகி, மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மகேஷ் கட்டிட வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் மகேஷ், வீட்டில் தனது செல்போனுக்கு சார்ஜ் போட்டு உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அவரை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், மகேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்