புதிதாக 22 பேருக்கு கொரோனா

புதிதாக 22 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

Update: 2022-09-25 21:43 GMT

சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 184 ஆக உயர்ந்தது.

நேற்று 19 பேர் குணமடைந்த நிலையில் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1 லட்சத்து 35 ஆயிரத்து 267 பேர் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் தற்போது தொற்று உள்ள 183 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 734 பேர் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்