கொரோனா தடுப்பூசி முகாம்

இளையான்குடியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

Update: 2022-08-07 18:53 GMT

இளையான்குடி, 

இளையான்குடி டாக்டர் சாகிர்உசேன் கல்லூரி நாட்டு நல பணித்திட்டம், இளம் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இளையான்குடி தேர்வு நிலை பேரூராட்சி பொது சுகாதார நோய் தடுப்புத்துறை ஆகியவை இணைந்து கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாமை நடத்தியது. கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி முகாமை தொடங்கி வைத்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். 22 பேர் இரண்டாம் தவணை கோவாக்சின் தடுப்பூசியும், கோவிஷில்டு தடுப்பூசி முதல் தவணையாக 10 பேரும், இரண்டாம் தவணையாக 17 பேரும், பூஸ்டர் டோஸ் தவணை 73 பேரும் செலுத்திக் கொண்டனர். முகாமை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் அஸ்மத்து பாத்திமா, பீர்முகமது, அப்ரோஸ், சேக் அப்துல்லா மற்றும் இளம் செஞ்சிலுவை சங்க திட்ட ஒருங்கிணைப்பாளர் நர்கீஸ் பேகம் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்