மரம் வேரோடு சாய்ந்து மோட்டார் சைக்கிள்கள் சேதம்

மரம் வேரோடு சாய்ந்து மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன

Update: 2023-06-12 18:45 GMT

எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் கூடிய லேசான மழை பெய்தது. இந்த நிலையில் புழுதிபட்டி சத்திரம் பகுதியில் ஒரு மரத்தடியின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மீது மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிள்கள் நொறுங்கியது. மரத்தடியில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக எந்த அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை. 

Tags:    

மேலும் செய்திகள்