ரெயில் மோதி ஜவுளி வியாபாரி சாவு

தர்மபுரியில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி ஜவுளி வியாபாரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.

Update: 2022-06-25 15:08 GMT

தர்மபுரியில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி ஜவுளி வியாபாரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.

தண்டவாளத்தில் பிணம்

தர்மபுரி பிடமனேரி பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் நேற்று காலை 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தண்டவாளத்தில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் தர்மபுரி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று இறந்து கிடந்தவர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் பெரியாம்பட்டி பாரதி நகரை சேர்ந்த ஜவுளி வியாபாரி முகேஷ் (வயது 40) என்பதும், இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. இவர் பல்வேறு ஊர்களுக்கு சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தது விசாரணையில் தெரிந்தது.

ரெயில் மோதியது

அதன்படி நேற்று முன்தினம் பெங்களூருவுக்கு வியாபாரத்திற்காக சென்று வருவதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு முகேஷ் புறப்பட்டுள்ளார். தர்மபுரி வந்த அவர் ரெயில் தண்டவாளத்தை கடந்த போது ரெயில் மோதி உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தர்மபுரி ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்