கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு

Update:2023-06-20 01:00 IST

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே கூன்மாரிக்கொட்டாய் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 62). விவசாயி. இவர் நேற்று காலை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். பின்னர் மோட்டரை நிறுத்த சென்றபோது அவர் தவறி கிணற்றில் விழுந்து இறந்தார். இதுகுறித்து தர்மபுரி தீயணைப்பு நிலையத்திற்கும், அதியமான்கோட்டை போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்து ராஜமாணிக்கத்தின் மீட்டு் பிரதே பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்