தர்மபுரியில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-23 16:19 GMT

தர்மபுரி:

தர்மபுரி பாரதிபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக மண்டல அலுவலகம் முன்பு அரசு போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யூ.சி. தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் ரவி தலைமை தாங்கினார். மண்டல பொது செயலாளர் நாகராஜ், உள்ளாட்சி பணியாளர் சங்க மாநில செயலாளர் ராதாகிருஷ்ணன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் மணி, தலைவர் மாதேஸ்வரன், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் சுதர்சனன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், 14-வது ஊதிய ஒப்பந்தத்தை கால தாமதம் செய்யாமல் பேசி முடிக்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வு கால பணப்பலன்களை வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள அகவிலைப்படியை ஒப்பந்தப்படி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். அரசு போக்குவரத்துக்கழகத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். கல்வி தகுதிக்கேற்ப வாரிசு பணி வழங்க வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அவசர காலங்களில் தேவைப்படும் விடுமுறையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்