மெட்ரோ ரயிலில் பயணிகளுக்கு இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்

சென்னை மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு இன்று முதல் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-07 01:45 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு கிடு கிடுவென அதிகரித்து மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்ததால், இதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசு மீண்டும் சில கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது.

தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. மேலும், பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு முகக்கவசம் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் பயணிகளுக்கும் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில் நிலையம் வந்து செல்லும் பயணிகளும் முகக்கவசம் அணிய வேண்டும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்