திருக்கோவிலூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

திருக்கோவிலூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.

Update: 2023-06-12 18:45 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள வடக்குத்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் சங்கர் (வயது 37), விவசாயி. இவர் நேற்று வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணலூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சீனிவாசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாாின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags:    

மேலும் செய்திகள்