கோவை - பல்லடம் இணைப்பு சாலைக்கு, பொள்ளாச்சி நா.மகாலிங்கம் பெயர் சூட்டப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கோவை - பல்லடம் இணைப்பு சாலைக்கு, பொள்ளாச்சி நா.மகாலிங்கம் பெயர் சூட்டப்படும் என அவரது நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

Update: 2023-01-08 06:55 GMT

சென்னை,

சென்னை கலைவாணர் அரங்கில் பொள்ளாச்சி மகாலிங்கம் நூற்றாண்டு விழா மலரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் பொள்ளாட்சி மகாலிங்கம் நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

மனிதப்பண்பில் சிறந்ததுடன் செல்வத்தை அறநெறிக்கு பயன்படுத்தியவர் பொள்ளாட்சி மகாலிங்கம். திருக்குறளை வடமாநிலங்களுக்கு கொண்டு செல்ல உதவியவர் பொள்ளாட்சி மகாலிங்கம். கோவை - பல்லடம் இணைப்பு சாலைக்கு பொள்ளாச்சி மகாலிங்கம் பெயர் சூட்டப்படும். பன்முக ஆற்றல் படைத்தவர் பொள்ளாச்சி மகாலிங்கம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்