அரசு அலுவலர் ஒன்றிய பொதுக்குழு கூட்டம்

திண்டுக்கல்லில், அரசு அலுவலர் ஒன்றிய பொதுக்குழு கூட்டம் நடந்தது.

Update: 2022-07-23 16:57 GMT

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் பார்த்த சாரதி தலைமை தாங்கினார். செயலாளர் முகமது ரபீக், மாநில துணை தலைவர் துரைப்பாண்டி, முன்னாள் மாநில பொதுச்செயலாளர் தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் சண்முகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பணி ஓய்வு பெறும் அரசு ஊழியர்களை பாராட்டி பேசினார்.

அதையடுத்து அரசு அலுவலர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் மாவட்ட நிர்வாகிகள், வட்டக்கிளை நிர்வாகிகள் என மொத்தம் 120 பேர் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக்கொண்டனர். பின்னர் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அரசு அலுவலர்கள் கோரிக்கைகளை எவ்வாறு அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வது என்பது தொடர்பாக விவாதம் நடந்தது. இதில் அரசு அலுவலர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்