கனமழை எதிரொலி: மதுரை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகின்றது.

Update: 2023-11-09 00:47 GMT

கோப்புப்படம் 

மதுரை, 

தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.எனவே மதுரை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளும் நடைபெறாது, என்று மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா அறிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்