மின் இணைப்பு இல்லாத உயர் கோபுர விளக்கு

மின் இணைப்பு இல்லாத உயர் கோபுர விளக்குக்கு மின் இணைப்பு வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2023-06-29 23:37 IST

அரக்கோணம்-திருத்தணி பிரதான சாலை மங்கம்மாபேட்டை மேம்பாலம் அருகே குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. அதற்கு மின் இணைப்பு வழங்க அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த உயர் கோபுர மின் விளக்கு பாழடைந்து வருகிறது. அதற்கு மின் இணைப்பு வழங்கி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்