திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
'மாண்டஸ்' புயல் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (சனிக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.