வீடுகளில் தொடர் கொள்ளை: முககவசம் அணிந்து திருடிய அண்ணன், தம்பி கைது

வீடுகளில் முககவசம் அணிந்து தொடர் கொள்ளையில் ஈடுப்பட்ட அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-01 05:32 GMT

திருவேற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இது குறித்து திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, முககவசம் அணிந்த 2 பேர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து முககவசம் அணிந்து சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த மதுரவாயல், நொளம்பூரை சேர்ந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் ரமேஷ் (வயது 45), உதயா (40) என்பதும் அண்ணன், தம்பிகளான இவர்கள் போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக முககவசம் அணிந்து பூட்டியிருக்கும் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 3 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்