ஓசூரில் அரசு ஆஸ்பத்திரி அருகே ஆண் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை

ஓசூரில் அரசு ஆஸ்பத்திரி அருகே ஆண் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை

Update: 2022-09-30 18:45 GMT

ஓசூர்:

ஓசூர் அரசு ஆஸ்பத்திரி அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், இறந்து கிடந்தார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேச மூர்த்தி, ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்