ராமேஸ்வரத்தில் கடல் திடீரென 200 மீட்டர் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக பகுதியில், திடீரென 200 மீட்டர் அளவுக்கு கடல் உள்வாங்கியது.
ராமேஸ்வரம்,
ராமேஸ்வரத்தில் கடல் திடீரென 200 மீட்டர் அளவுக்கு உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சமடைந்தனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக பகுதியில், திடீரென 200 மீட்டர் அளவுக்கு கடல் உள்வாங்கியது. இதனால் மீனவர்கள் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்திருந்த நாட்டுப்படகுகள் தரை தட்டி நின்றன.