கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-07 19:52 GMT

திருச்சி ரெட்டை வாய்க்கால் செல்வநகர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 41). ஒப்பந்த அடிப்படையில் சமையல் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று ராமகிருஷ்ணா பாலம் அருகே உள்ள டீக்கடையில் அவர் நின்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி ஜீவா நகர் பகுதியை சேர்ந்த கணேசன்(42) என்பவர், மாரியப்பனிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றார். இது குறித்த புகாரின்பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணேசனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்