சாராயம் விற்றவர் கைது

சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-07-26 00:16 IST

சங்கராபுரம்,

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் விரியூர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு அதே ஊரை சேர்ந்த ஜோசப் (வயது 40) என்பவர் தனது வீட்டின் அருகில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்,

Tags:    

மேலும் செய்திகள்