சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவர் கைது

சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-23 14:28 GMT

சங்கராபுரம்,

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் வடசெட்டியந்தல் கிராம பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள சுடுகாடு அருகே சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 65) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்