Liquor seller arrestedவிராலிமலையிலிருந்து மாதிரிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மாதிரிபட்டி சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே அத்திப்பள்ளத்தை சேர்ந்த சிவவேல் (42) என்பவர் மறைத்து வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 45 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.