மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

Update: 2022-08-04 19:53 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்றுமுன்தினம் ஆம்னி பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகப்படும் வகையில் ஒருவர் கைப்பையுடன் நின்று கொண்டிருந்தார். உடனே, போலீசார் அவரை பிடித்து கைப்பையை சோதனை செய்தனர். அதில், 15 மது பாட்டில்கள் இருந்தது. விசாரணையில், புத்தேரி பகுதியை சேர்ந்த ஜெய்சிங் (வயது48) என்பது, அந்த பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து ஜெய்சிங்கை போலீசார் கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்