வெள்ளை கற்கள் கடத்தி வந்த லாரி பறிமுதல்

வெள்ளை கற்கள் கடத்தி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2023-05-19 19:10 GMT

கடவூர் அருகே உள்ள மேற்கு சுக்காம்பட்டி பகுதியில் ஒரு லாரியில் வெள்ளை கற்கள் கடத்தி வரப்படுவதாக அப்பகுதி பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் அந்த லாரியை சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து லாரியை பறிமுதல் செய்து பாலவிடுதி போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து பாலவிடுதி போலீசார் லாரியை ஓட்டி வந்த மதுரை மாவட்டம், அவனியாபுரத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 35) என்பவர் மீது வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்