லாட்டரி சீட்டு விற்றவர் கைது

கடலூாில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டாா்.

Update: 2022-08-21 16:33 GMT

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையிலான போலீசார் திருவந்திபுரம் சாலக்கரை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் ஒருவர், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கடலூர் கே.என்.பேட்டை பகுதியை சேர்ந்த கந்தவேல் (வயது 56) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கந்தவேலை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்