லாட்டரி சீட்டுகள் விற்றவர் சிறையில் அடைப்பு

லாட்டரி சீட்டுகள் விற்றவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2023-10-17 17:11 GMT

ஆலங்குடி அருகே செம்பட்டிவிடுதி பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டுகளை விற்ற வடவாளம் ஊராட்சி மேலக்காயம்பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 47) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 2 செல்போன்கள், கேரள லாட்டரி சீட்டுகள், ரூ.740 ஆகியவற்றை பறிமுதல் செய்து செம்பட்டிவிடுதி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணனை ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய்பாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்