காதல் ஜோடியை தாக்கி நகை, செல்போன் பறிப்பு

ஆம்பூர் அருகே காதல் ஜோடியை தாக்கி நகை, செல்போன் பறித்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-06-19 17:39 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பச்சக்குப்பம் ரெயில்வே மேம்பாலம் அருகே காதல் ஜோடி ஒன்று தனிமையில் பேசிக்கொண்டிருந்தனர். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் 4 பேர் அங்கு வந்தனர். அவர்கள் தனியாக இருந்த காதல் ஜோடியை சரமாரியாக தாக்கினர். மேலும் அவர்களிடம் இருந்த 2 பவுன் சங்கிலி, செல்போன் மற்றும் பணம் உள்ளிட்டவைகளை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து காதல் ஜோடியினர் 2 பேரும் ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்