காதல் திருமணம் செய்த வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

அம்பையில் காதல் திருமணம் செய்த வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-07-04 20:32 GMT

நெல்லை மாவட்டம் அம்பை அருேக உள்ள கல்லிடைக்குறிச்சி தெற்கு ஆத்தியடி தெருவை சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவருடைய மகன் சரவணன் (வயது 25). இவர் கோவையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

சரவணன், ஒரு இளம்பெண்ணை காதலித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்கள் கோவையில் வசித்து வந்தனர்.

தற்கொலை

இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சரவணன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். அவர் மனமுடைந்து காணப்பட்டார்.

நேற்று காலை அம்பை ரெயில்வே கேட் அருகே வந்த சரவணன், அந்த வழியாக சென்ற பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தென்காசி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

காதல் திருமணம் செய்த வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்