மோட்டார் சைக்கிள் திருட்டு
காரியாபட்டி அருகே மோட்டார் சைக்கிளை திருடி சென்றனர்.;
காரியாபட்டி,
காரியாபட்டி தாலுகா எஸ்.மறைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் திருக்குமரன் (வயது 23). தொழிலாளியான இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை தனது வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் வேலை முடிந்து வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.