மோட்டார் சைக்கிள் திருட்டு
ஸ்ரீவில்லிபுத்தூரில் மோட்டார் சைக்கிளை திருடி சென்றனர்.;
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் மஜீத் நகரில் உள்ள அரசு அதிகாரிகள் குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் மாடசாமி. இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். பின்னர் மறுநாள் காலையில் எழுந்து பார்க்கும் போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.