திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-07-20 04:11 GMT

திருச்சி,

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பல்கேரியா, இலங்கை சூடான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 143 பேர் அகதிகள் சிறப்பு முகாமில் உள்ளனர்.

இந்நிலையில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக என்ஐஏ எஸ்.பி தர்மராஜன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்களுடன் திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாமில் சோதனை நடைபெற்று வருகிறது. முகாமில் உள்ள சந்தேகத்திற்கிடமான சிலரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்