தமிழ்நாட்டில் நிபா வைரஸ் கண்டறியப்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அடுத்த மூன்று மாதங்களுக்கு மக்கள் கவனமுடன் இருக்கவேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2023-09-16 06:57 GMT

சென்னை,

சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை என தெரிவித்தார்.

தமிழகத்தில் ஜனவரி முதல் தற்போது வரை 4 ஆயிரத்து 48 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர் என்று கூறிய அவர், மழைக்காலங்களில் டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவுவது வழக்கமானது என்று கூறினார். மேலும், அடுத்த மூன்று மாதங்களுக்கு மக்கள் கவனமுடன் இருக்கவேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்