ஆத்தூர் அருகே கார் மோதி மூதாட்டி பலி மகள் கண்முன்னே பரிதாபம்

ஆத்தூர் அருகே கார் மோதியதில் மூதாட்டி, தனது மகள் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-08-01 20:19 GMT

ஆத்தூர்,

மூதாட்டி

ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் இளங்கோ நகர் பகுதியை சேர்ந்தவர் அழகப்பன். இவருடைய மனைவி பாப்பா (வயது 70). இவர்களது மகள் ஜெயா (40). இவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கலியனூர் வீதியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது மகள் ஜெயாவை ஆடிப்பண்டிகைக்காக ராமநாயக்கன்பாளையத்துக்கு அழைத்துக் கொண்டு வந்தார். ஆத்தூர் அருகே கொத்தம்பாடி பஸ் நிறுத்தத்தில் இருந்து சேலம்-ஆத்தூர் சாலையை பாப்பா கடக்க முயன்றார். அப்போது சேலத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி வந்த கார் பாப்பா மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதைப்பார்த்த அவரது மகள் ஜெயா, அதிர்ச்சியில் அலறினார்.

பலி

மேலும் கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த பாப்பாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆத்தூர் ரூரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிற்காமல் சென்ற காரை தேடி வருகிறார்கள்.

மகள் கண்முன்னே கார் மோதியதில் மூதாட்டி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்