கொலை வழக்கில் ஒருவர் கைது

டிரம்ஸ் இசைக்கலைஞர் கொலை வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-22 19:57 GMT

விருதுநகர் பாண்டியன்நகரில் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் டிரம்ஸ் இசைக்கலைஞர் முத்துப்பாண்டி(வயது 17). இவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த அஜித் என்ற அஜித்குமார்(26) என்பவரை பாண்டியன் நகர் போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே 10-க்கும் மேற்பட்ட குற்றவியல் வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இக்கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றன

Tags:    

மேலும் செய்திகள்