வாகனம் மோதி ஒருவர் பலி

கிருஷ்ணகிரியில் வாகனம் மோதி ஒருவர் பலியானார்.

Update: 2022-07-08 17:19 GMT

கிருஷ்ணகிரியில் சேலம் - ஓசூர் தேசிய நெடுஞ்சாலை ஆஞ்சநேயர் கோவில் மேம்பாலம் அருகில் சாலையில் நடந்து சென்றவர் மீது அந்த வழியாக சென்ற வாகனம் மோதியது. இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருக்கு வயது 45 இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் குறித்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்