எஸ்.புதூர்,
எஸ்.புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களான செட்டிகுறிச்சி, கே.புதுப்பட்டி, கரிசல்பட்டி, நல்லவன்பட்டி, தர்மபட்டி ஆகிய பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து சுமார் 1 மணி நேரம் நல்ல மழை பெய்தது. இதன் காரணமாக இந்த பகுதி முழுவதும் குளிர்ந்து காணப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.