தீவிபத்தில் கூரை வீடு எரிந்து சேதம்

கச்சிராயப்பாளையம் அருகே தீவிபத்தில் கூரை வீடு எரிந்து சேதமானது.

Update: 2022-05-24 16:40 GMT

கச்சிராயப்பாளையம், 

கச்சிராயப்பாளையம் அருகே எடுந்தவாய்நத்தம் நாராயணகுன்று கிராமத்தை சேர்ந்தவர். முத்துகிருஷ்ணன். இவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைபார்த்த முத்துகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி செல்வி இருவரும் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர். இதுகுறித்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் வீட்டில் இருந்த நகை, பணம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது.

Tags:    

மேலும் செய்திகள்