ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்

கோத்தகிரியில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2022-11-23 18:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரியில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினார்கள்.

கோரிக்கைகள்

தமிழகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு திணிக்கப்படும் பணி நெருக்கடிகள், விடுமுறை தின ஆய்வுகளை கைவிடுதல், ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல், விடுபட்ட மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, சிறப்பு நிலை, தேர்வுநிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குதல், பணிவரன்முறை செய்தல், அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றும், இன்றும் (வியாழக்கிழமை) என 2 நாட்கள் ஒட்டு மொத்த சிறு விடுப்பு போராட்டமும், அடுத்த மாதம்(டிசம்பர்) 14-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டமும் நடத்தப்போவதாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

போராட்டம்

அதன்படி கோத்தகிரி பகுதியில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் 2 நாட்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோத்தகிரி பேரூராட்சி அலுவலகம், அலுவலர்கள் யாருமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.

இந்த போராட்டம் இன்றும் நடைபெறுகிறது. தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் அடுத்த மாதம் 14-ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவது உறுதி என்றும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்