புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடைக்கு சீல் - மாவட்ட ஆட்சியர்

புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடைக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்

Update: 2023-07-09 08:52 GMT

வேலூர்,

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பிரியாணி கடை ஒன்று புதிதாக திறக்கப்பட்டது. இங்கு வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக ஒரு பிரியாணி வாங்கினால் ஒன்று இலவசம் என அறிவித்தனர். இதனால் பொதுமக்கள் பலர் கடையில் குவிந்தனர்.

இதனால் காட்பாடி - வேலூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அப்பகுதி வழியாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வந்தார். மக்கள் வெயிலில் அவதிப்படுவதையும், தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் இல்லாததையும் கவனித்துள்ளார். இதனால் கடைக்கு சீல் வைக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்