எஸ்.எப்.ஆர். கல்லூரியில் பட்டமளிப்பு விழா
எஸ்.எப்.ஆர். கல்லூரியில் பட்டமளிப்பு விழா;
சிவகாசி
சிவகாசி எஸ்.எப்.ஆர்.பெண்கள் கல்லூரியில் நேற்று காலை பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் திலகவதிரவீந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரியின் நிர்வாக உறுப்பினர் மகேஸ்வரன், விஜயலட்சுமி சிரஞ்சீவிரத்தினம், ப்ரீத்திவசீகரன் ஆகியோர் முன்னிலை வகித்தார். முதல்வர் பழனீஸ்வரி வரவேற்று பேசினார். மதுரை காமராசர் பல்கலைக்கழக தொடர்பியல் துறை தலைவர் நாகரத்தினம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 1036 மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசினார்.